எய்ட்ஸ் விழிப்புணர்வு & வழிகாட்டுதல் முகாம்

02 Sep 2026

வேடசந்தூர் அரசு மருத்துவமனையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பாக தீவிர எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது!

இதன் ஒரு பகுதியாக, வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட (அலகு எண்: 130) மாணவர்களுக்கு:

எச்.ஐ.வி. & பால்வினை நோய் பரிசோதனை முறைகள்

விழிப்புணர்வு ஆலோசனைகள்

நம்பிக்கை மையத்தின் செயல்பாடுகள்

குறித்துப் எரியோடு நம்பிக்கை மைய ஆலோசகர் திரு. விஜயசாரதி அவர்கள் மாணவர்களிடையே விரிவாக விளக்க உரையாற்றினார்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினர்கள்:

தலைமை:

முனைவர் க. மா. சுமதி (கல்லூரி முதல்வர்)

மருத்துவர் தீரன் சக்கரவர்த்தி (உதவி மருத்துவ அலுவலர்)

மருத்துவர் பூவிழி (உதவி மருத்துவ அலுவலர்)

சிறப்பு வருகை:

திருமதி செண்பகவல்லி (நம்பிக்கை மைய ஆலோசகர்)

திருமதி சுதா (ஆய்வக நுட்புநர்)

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

பேராசிரியர் முனைவர் அ. கார்த்திகேயன் [NSS திட்ட அலுவலர்]

மாணவர்களின் சமூகப் பொறுப்பையும் ஆரோக்கிய விழிப்புணர்வையும் மேம்படுத்திய ஒரு பயனுள்ள நிகழ்வு!